முஸ்லிம் கட்சிகளுக்குள்ளே தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் இடையிலே ஏற்பட்டுள்ள மோதல்கள் கேவலமாக உள்ளது
Published by Lankaexpress news on Tuesday, May 24, 2016 |
முஸ்லிம் கட்சிகளுக்குள்ளே தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் இடையிலே ஏற்பட்டுள்ள மோதல்கள் கேவலமாக உள்ளது
பேராசிரியர் றமீஸ் அப்துல்லா
(பி.எம்.எம்.ஏ.காதர்)
முஸ்லிம்கள் சமாதானத்தின் விரோதிகள் அல்ல இந்த நாட்டில் முஸ்லிம்கள் சமாதானத்தின் விரோதிகள் என்று எப்போதுமே காட்டப்படுகின்றவர்கள்;; இந்த விடையம் தொடர்ச்சியாகச் மேற்கொள்ளப்படுகின்ற விடையம் என தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்,கலாநிதி றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழதிய அரசில் கட்டுரைகளின் தொகுப்பான 'முஸ்லிம் அரசியலின் இயலாமை'நூல்; வெளியீட்டு விழா சனிக்கிழமை(21-05-2016)மாலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது இங்கு நூல் பற்றி திறனாய்வுரையாற்றய போதே அவர் இவவாறு தெரிவித்தார்.
வைத்திய கலாநிதி எஸ்.நஜூமுதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன் அலி கலந்த கொண்டார்.கவிஞர் நவாஸ் சௌபி தொடக்கவுரை நிகழ்த்தினார். பன்நூலாசிரியர் தீரன் ஆர்.எம்.நௌசாத் கவி வாழ்த்தினைப் பாடினார்;.
பிரதம அதிதியாக் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமா எம்.ரி.ஹஸன் அலி நூலின் தொழிலதிபர் எம்.எச்.நாசர்,எம்.எஸ்.எம்.ரிம்சான்.அஸ்வான் சக்காப் மௌலானா,உவைஸ் முகம்மட் ஆகியோருக்கு வழங்கினார்.பெரும் அளவிலானோர் கலந்து கொண்டனர்.
இங்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்,கலாநிதி றமீஸ் அப்துல்லா மேலும் உரையாற்றுகையில்
தெரிவித்ததாவது:-- முஸ்லிம்கள் சமாதானத்தின் விரோதிகள் அல்ல என்ற கருத்தை நூறுல் ஹக்; இந்தப் புத்தகத்திலே தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.
இலங்கையின் முஸ்லிம் அரசியல் கள நிலவரங்களையும்,முஸ்லிம் சமூகம் எதிநோக்குகின்ற பிரச்சினைகளையும்'முஸ்லிம் அரசியலின் இயலாமை' என்ற இந்தப் புத்தகத்திலே நூறுல் ஹக் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.அதேவேளை முஸ்லிம் அரசியல் என்ன செய்து கொண்டிருக்கின்றது என்ற கேள்வியையும் அவர் ஏழுப்பியிருக்கின்றார்.
எழுத்தாளர் நூறுல் ஹக் அவர்கள் முஸ்லிம் அரசியலுக்கப்பால் பகுத்தறிவு வாத சிந்தனையிலும் அவரது கவனம் செலத்தப்படுகின்றது இருந்தபோதிலும் மிகவும் நிதானமாக முஸ்லிம் அரசியலை அவர் ஆராய்ந்து பல விடையங்களை வெளிக்காட்டியிருப்பது அவருது அரசியல் ஆளுமையை புடம் போட்டுக்காட்டுகின்றது.
இந்த நூல் பற்றி பேசுவதற்கு முன் பல விடையங்களை எடுத்துக் காட்டாகச சொல்ல வேண்டியிருக்கின்றது ஒன்று இந்த நாட்டின் தேசிய அரசினுடைய நிலை அல்லது இந்த நாட்டின் நல்லாட்சி பற்றி கொண்டிருக்கின்ற அபிப்பிராயம் என்ற ஒரு கோதாவிலே இலங்கை மக்களை ஒரு சமூகமாக எடுத்துக் கொண்டு அதனை விசுவாசமாகப் பார்கின்ற நிலை.
இரண்டாவதாக தமிழர்களுடைய அரசியலோடு பேசிப்பார்கின்ற ஒரு விஷயம் இருக்கின்றது மிகப்பக்குவமாக இந்த விஷயத்தை கையாளுவதிலே முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் மிகவும் அவதானமாக கையாண்டு வருகின்றது அதன் அண்மைக்காலப் போக்கு இதற்கு உதாரணமாக எடுத்துக்காட்ட முடியும்;.
மூன்றாவது விஷயம் முஸ்லிம் அரசியலுக்குள்ளே முஸ்லிம் கட்சிகளுக்குள்ளே இருந்து பார்கின்ற விஷயம்.நான்காவது விஷயம் முஸ்லிம் தனியான ஒரு அரசியல் கட்சிக்குள்ளே பார்கின்ற ஒரு விஷயம்.இப்போது நாம் எல்லோரும் ஒரு விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கின்றோம் முஸ்லிம் அரசியல் கட்சிகளும்,முஸ்லிம் அரசயல் தலைமைகளும் ஒன்றுபட வேண்டுமென்று மிகவும் அக்கறையோடு பேசிக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் அதன் உச்சரிப்பு.தொனிப்பு இந்த நாடு முழுக்க முஸ்லிம் சமூகத்தின் அவாவாக ஒலித்துக் கொண்டிருக்கின்ற போது முஸ்லிம் கட்சிகளுக்குள்ளேயே தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் இடையிலே மோதல்களாக இன்றைய முஸ்லிம் அரசியல் மாறியிருக்கின்ற அவலத்தை நாங்கள் என்ன என்று சொல்வது இது முஸ்லிம் காங்கிரஸூக்குள் மட்டுமல்ல அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்குள்ளும் பரவியிருக்கின்றது.
தேசிய அரசியலிலும் இந்த நிலை உருவானது மஹிந்த ராஜபக்ஷவுக்கும்.மைத்திரிபாலவுக்கும்,ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,திஸ்ஸ அத்தநாயக்காவுக்கும் ஏற்பட்ட நிலையும் இதுதான் இந்த நிலைமையின் கடைசி நிலைமை முஸ்லிம் அரசியலுக்குள்ளும் ஆக்கிரமித்திருக்கின்றது. முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் சுதந்திரமாகப் பேசவேண்டும் அவர்கள் ஒருமித்த குரலில் முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைகளைப் பேசவேண்டும் திர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்க அவர்களுக்கு இடையில் இவ்வாறு முறுகல் இருப்பது ,முஸ்லீம் சமூகத்துக்கு பின்னடைவாகும்.





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>