பேராசிரியர் றமீஸ் அப்துல்லா கவிஞர் சோலைக்கிளி ஆகியோருக்கு சமாதான தூதுவர் விருது
www.lankaexpressnews.comcom
(பி.எம்.எம்.ஏ.காதர்)
இலங்கை சமாதான கற்கைகள் நிலையத்தினால் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,கவிஞர் சோலைக் கிளி ஆகியோக்கு சமாதான தூதுவர் விருது வழங்கிய நிகழ்வு சனிக்கிழமை (21-05-2016)சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்பத்தில் இலங்கை சமாதான கற்கைகள் நிலையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட செயலக மேலதிக மாவட்டச் செயலாளர் அஷ்செய்க் எம்.ஐ.எம்.அமீர் இவர்களுக்கான சமாதான தூதவர் விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன் பள்ளிகளின் பணியகத்தின் தவிசாளர் பொன் செல்வநாயகம்,கல்முனை பிரதேச செயலக திவிநெகம சிரேஷ்ட தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் உட்பட பலர் கலந்து கொண்டனர்





0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>