Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Monday, August 8, 2016

சிக்கியது இரண்­டரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான மொபைல் மற்றும் பொருட்கள்.

Print Friendly and PDF
சிக்கியது இரண்­டரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான மொபைல் மற்றும் பொருட்கள்.






(எம்.எப்.எம்.பஸீர்)

வரி செலுத்­தாமல் சட்ட விரோ­த­மாக நாட்­டுக்குள் எடுத்து வரப்­பட்ட சுமார் இரண்­டரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான கைய­டக்கத் தொலை­பே­சிகள், டெப் கள் மற்றும் அழ­கு­சா­தனப் பொருட்கள் உள்­ளிட்ட ஒரு தொகை பொருட்­க­ளுடன் நால்வர் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.

 கட­வத்தை - கோணஹேன பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை முகா­முக்கு கிடைத்த இரக­சிய தக­வ­லுக்கு அமை­வாக கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தின் பிர­தான வெளிச் செல்லும் வாயி­ல­ருகே முன்­னெ­டுக்­கப்பட்ட சுற்­றி­வ­ளைப்­பி­லேயே நால்­வரும் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.

நேற்று அதி­காலை, விமான நிலை­யத்தின் பிர­தான வெளிச் செல்லும் வாயில் ஊடாக இத்­த­கைய பதிவு செய்­யப்ப­டாத, வரி செலுத்­தாமல் நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­படும் பொருட்­களை குழு­வொன்று எடுத்துச் செல்ல முற்­ப­டு­வது குறித்து கோண­ஹேன அதி­ர­டிப்­படை முகா­முக்கு தகவல் கிடைத்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து விசேட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளைத் தள­பதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்ஜித் பெரே­ராவின் உத்­த­ர­வுக்கு அமைய சுமார் 17 பேர் கொண்ட அதி­ர­டிப்­படை குழு­வினர் சுற்­றி­வ­ளைப்பை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

அதி­ர­டிப்­ப­டை­யினர் செல்லும் போது சந்­தேக நபர்கள் பொருட்­களை வேன் ஒன்றில் ஏற்றிக்­கொண்­டி­ருந்­துள்­ள­துடன் உடன் செயற்­பட்ட அவர்கள் சந்­தேக நபர்­க­ளுடன் பொருட்­க­ளையும் தமது பொறுப்பில் எடுத்து பின்னர் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக சுங்கப் பிரிவி­ன­ரிடம் கைய­ளித்­துள்­ளனர்.

அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் கைப்­பற்­றப்­பட்ட பொருட்­களில் வரி செலுத்தாது கொண்­டு­வ­ரப்­பட்ட கைய­டக்கத் தொலை­பேசி மற்றும் டெப்கள் 2309 உம், கைய­டக்கத் தொலை­பே­சியின் உதி­ரிப்­பா­கங்கள் மற்றும் மெமரி சிப்கள் ஒரு தொகையும், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிக­ரட்­டுக்கள் ஒரு தொகையும் இருந்­துள்­ளன.

இதன் உண்மைப் பெறு­மதி 2 கோடியே 34 இலட்­சத்து 33978 ரூபா என பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் தெரிவித்தனர்.

பொருட்களையும் சந்தேக நபர்களையும் சுங்கப் பிரிவினர் பொறுப்பேற்று நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர்களுக்கு தலா 21 இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express