Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Sunday, April 24, 2016

நீருக்கடியில் மர்மம்

Print Friendly and PDF
நீருக்கடியில் மர்மம்



1995-ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் கடலுக்கடியில் சென்றபோது, கடலின் தரைப்பகுதியில் வட்டவடிவத்தில் மணல் திட்டுகளைப் பார்த்தனர். இது நிலப்பகுதியில் ஏற்கனவே காணப்படும் வடிவங்களைப் (crop circles) போலவே இருந்ததால், இவற்றின் மீதான ஆய்வு விரைவாகத் தொடங்கப்பட்டது. இது அறியப்பட்ட 10 ஆண்டுகளில் அடிக்கடி இதுபோல் தோன்றுவதும், மறைவதும் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் அர்த்தம் என்ன என்பது மட்டும் யாராலும் விளக்க முடியாத மர்மமாகவே இருந்தது.

ஆனால் அதற்குப் பதில் கிடைத்து விட்டது. இதுவும் ஒருவகையான மீன் தான்! குறிப்பாக வெள்ளைப் புள்ளி கோளமீன் (White Spotted Pufferfish) என்று அழைக்கப்படும் மீன் தான் இந்த மர்மத்துக்குப் பின்னால் இருக்கும் கதாநாயகன் ஆகும். கடலுக்கடியில் வாழும் இந்த மீன் தனது இணையினை கவர்வதற்காக, இது போன்ற வட்ட வடிவிலான அமைப்பினை ஏற்படுத்துமாம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த வகை மீன் வெறும் 12 சென்டிமீட்டர் மட்டுமே நீளமுடையது. ஆனால் தனது பின்பகுதியினைத் தொடர்ந்து அசைப்பதன் மூலம் ஏறக்குறைய 2 மீட்டர் விட்டம் கொண்ட வட்டவடிவிலான அமைப்பினை உருவாக்குகிறது. இதன் அருகில் வரும் பெண் மீன் இதனால் கவரப்பட்டால் அந்த மீனுடன் இணைந்து அந்த வடிவத்தின் மேல் முட்டைகளை இடும்.
பின்னர் ஆண் மீன் குஞ்சுகள் வெளிவரும் வரை முட்டைகளைப் பாதுகாக்கும். பின்னர் அந்த வடிவத்தினை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடும். வெறும் 7 முதல் 9 நாட்கள் மட்டுமே இருக்கும் இந்த வடிவங்கள், ஒரு சில நாட்களில் நீரின் வேகத்தினால் விரைவாக அழிந்துவிடும்.

நேற்று மர்மமாக இருந்த ஒரு விஷயத்திற்கு இன்று விடை தெரிந்துவிட்டது. இதே போன்று தான், நமக்கு இன்று மர்மமாகத் தோன்றும் ஒரு விஷயத்திற்கு நாளை கண்டிப்பாக விடை தெரிந்துவிடும். என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே? இந்த அதிசய மீனைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இதைப் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக அறியத் தாருங்கள்!

அது வரை தொடர்ந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும்,

உங்கள்
SciNirosh (Niroshan Thillainathan
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express