Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Published On: Wednesday, April 20, 2016
Print Friendly and PDF
ஈக்வடோரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

எனவே, இவ்வாறான நிலையில் அனைவரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளிலிருந்து மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை அந்நாட்டில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 7.8 ரிகடர் அளவு சக்தி கொண்டது என அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த நூறாண்டுகளில் 7.0 அளவுகொண்ட பல நிலநடுக்கங்களை ஈக்வடோர் எதிர்கொண்டுள்ளது போதிலும், இவ்வாறான பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :





0 comments:

உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>

 
Copyright © 2016. Lanka Express News - All Rights Reserved
Designed by Lanka Express