மியன்மாரில் ஆலங்கட்டி மழை - 9 பேர் பலி, 1700 பௌத்த கோபுரங்கள் சரிந்தன
-BBC-
மியன்மாரில் ஆலங்கட்டி மழையில் சிக்கி குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடும் புயலுடன் கூடிய இந்த ஆலங்கட்டி மழை பொழிவில் கோல்ஃப் பந்து அளவுக்கு நீர்க்கட்டிகள் விழுந்துள்ளன.
மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடு ஓடுவதை தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
இந்த புயல்காற்றில் 1700 பகோடாக்கள் (மியன்மாரின் பௌத்த வழிபாட்டுக் கோபுரங்கள்) சரிந்துள்ளதாக கூறப்படுகின்றது. மற்றபல கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.
மியன்மாரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவிய நீண்ட வெப்பக் காலநிலைக்குப் பின்னதாக இந்த புயல்காற்று வீசியுள்ளது.






0 comments:
உங்கள் கருத்தை இங்கு பதியவும்-->>